Sunday, 25 December 2011

உலகில் உள்ள உயிரினங்களை படைத்தது கடவுளா?

அக்காலத்தில் இருந்த டைனோஸர் தற்காலத்தில் இல்லை. உயிரினங்களைப் படைத்தது கடவுள் என்றால், அழிந்த டைனோஸரை மீண்டும் அவற்றைக் கடவுள் படைத்திருக்கலாமே? ஏன் படைக்கவில்லை? இன்று உலகிலுள்ள அரிய உயிரினங்களை அறவே அழித்துவிட்டால், அவை மீண்டும் வராது (உருவாகாது). காரணம், அவை இயற்கையில் தோன்றியவை. கடவுள் படைப்பாக இருந்தால் மீண்டும் படைக்கப்படலாமே!

எனவே, உயிரினங்களை, உலகைப் படைத்தது கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது.
 
படைக்கப்பட்டது எதுவானாலும் அழிந்தால், மீண்டும் படைக்கப்படும். இயற்கையில் உள்ளவை எல்லாம் படைக்கப்படாதவை ஆகையால், அவை அழிந்தால் மீண்டும் வராது.

இவ்வுலகம், இவ்வுலகில் உள்ள யிரினங்கள் அனைத்தும் படைக்கப்படாதவை என்பதால் அவற்றைப் படைக்க கடவுளும் இல்லை என்பது உறுதியாகிறது

No comments: